Monday 26 January 2015

காரி உமிழாத கண்ணீர்
----------------------
பல்லாயிரம் மைல்கள்
தொலைவில் இருக்கும்
ஜாலியன்வாலாபாக்
காண
காலத்தின் வழி ஊடுருவி
1919க்கு
பயணிக்கும் பல கண்களுக்கு
தங்கள் காலடியில் இருக்கும்
கீழவெண்மணி தடம்
தெரியவதில்லை.
1968 ஆம் ஆண்டு மட்டும்
கிறித்து பிறப்பைக் கொண்டாட
பெத்லகேமுக்கு போயிருப்பார்களோ...
இருளில் நடந்தது என்பதால்
இன்னுமா தெரியவில்லை.
அன்று ஒடுக்கப்பட்டவர்களை தீண்டியதால்
தீ ஜூவாலையும்
தீட்டாகி
யாருடைய கண்களையும் தீண்டாமல்
ஒதுங்கித்தான் எரிகிறது!
மாண்டு போன Dyer மேல்
வெறுப்பை உமிழும் கண்கள்
இன்றும் எரியும் ஜாதித் தீயை
அணைக்க
ஒரு துளி கண்ணீரைக் கூட
காரி உமிழ்வதில்லை...



No comments:

Post a Comment