Monday 26 January 2015

புன்னகைத் திருடி
---------------------------
அவளது புன்னகையில்
அப்படி ஒரு நேர்த்தி.
நான் தாயின் கருவறையில்
துயில் கொண்ட போது
நிறைமதி என என் தாய்
சூடிய புன்னகை,
கேமரா லென்ஸ் பார்க்க
அரைக்கால் டிரௌசரில் நானும்
பூப்போட்ட பாவாடைச் சட்டையில் என் தங்கையும்
 சூடிய புன்னகை,
என எனக்குப் பிடித்த
அத்தனைப் புன்னகைகளையும்
ஒரு சரமாய்த் தொடுத்து
சூடியிருந்தாள் அவள்.
எனக்கான தேவதை இவள்தான்
என்று
ஒரு புதுப் புன்னகை
என் சிரசில் சீட்டியடித்து சென்றது.
காரணமின்றி உன் புன்னகை
ஏனோ பிடித்துப் போனது
என்று சொன்னேன் தேவதையிடம் காரணத்துடன்.
அன்று முதல் என்
புன்னகையைக் காணவில்லை.
அவள் என் புன்னகையைத்
திருடிவிட்டாள்.
அவள் ஒரு புன்னகைத் திருடி.
அவளைப் பார்த்தால் கொஞ்சம்
என்னிடம் சொல்லுங்கள்.
அவளின் அடையாளம் தானே
கேட்கிறீர்கள்.
அதான் முன்னேயே சொன்னேனே.
நிறைமாத கருசுமக்கும் தாயின்
புன்னகையையும்
கள்ளம் அறியா பிஞ்சுகளின்
புன்னகையையும்
சரமாய்த் தொடுத்து சூடியிருந்தால்(ள்)
அவளே தான்.
புன்னகைக் கள்ளி!











No comments:

Post a Comment