Monday 26 January 2015



கற்களை எறிந்து குளத்தில்
அலைகளை செதுக்கிருந்தேன்.
நேர்த்தியிலும் நளினத்திலும்
பிறைசூடி நடனமிட்ட
நடராஜன் சிலையை விட
இந்த அலைகள் மிஞ்சியிருந்தன.
ஏன் பிறைநிலவு கூட
அந்த அலைகளில் தன்னை
சூடிக் கொள்ள வந்துவிட்டது.
அப்படியே கங்கையும்
வந்துவிட்டால் போதும் !

No comments:

Post a Comment