Monday 26 January 2015

இனியும் பூக்காதே குறிஞ்சி
-------------------------------
குறிஞ்சி பன்னிரு வருடத்திற்கு
பிறகு
பூத்ததில்
இருந்த சுவாரசியம்...
அது எனக்காக மட்டும்
பூக்கவில்லை
என்ற நிதர்சனம் சுடும்போது
வந்த நெருடலைப் போக்க
'நெரூடா' வந்தார்.
நீ பூக்காமல் இருந்த காலத்தில்
மலர்ந்து விடாத
அத்தனை மலர்களின்
ரம்மியமான வண்ணங்களையும்
மறைத்திருந்தாய்.....
அதை நான் மட்டும்
பார்த்திருந்தேன்.
நீ மலர்ந்த
இன்றோ நான் மட்டும்
கண்டிருந்த ஒளி களவு போகிறது
கரைந்து போகிறது..
வண்டுகள் கூட உன் வாசல்
கதவை தட்டுகின்றன.
நீ பூப்பது இதுவே இறுதியாகட்டும்.
உன்னில்
மலராத போது ஒளிந்திருக்கும்
அத்துணை மலர்களின்
ஒளியும்
மணமும்
என்னை மட்டும் நிரப்பட்டும் !
இனியும் பூக்காதே குறிஞ்சி.






No comments:

Post a Comment