Monday 26 January 2015

கடவுள் நம்பிக்கை இருந்த
காலத்தில் வரம் கேட்டிருந்தேன்.
"இப்படியே இளமையாகவே இருக்க வேண்டும் "என்று.
வரம் கொடுப்பதில் கடவுள்
தந்திரசாலி என்று
பல கதைகள் தெரிந்தும்
கேட்டுவிட்டேன் வரங்களை.
அவனும் கொடுத்திருக்கிறான்.
வழக்கம் போலவே.
சட்டத்தில் உள்ள ஓட்டைகளைவிட
அவன் கொடுத்த வரத்தில்
ஆயிரம் ஓட்டைகள்.
பால்ய பருவத்தில் கேட்ட வரமது.
இப்படியே இளமையாகவே
இருக்கட்டும் என்று வேண்டிய உடல்
முதுமையை நோக்கி
நாள்தோறும் மூச்சிரைக்க ஓடுகையில்,
இந்த மூளை மட்டும்
அந்த பருவத்தைத் தாண்டாமல்
பாலகனாகவே இருக்கிறது.
வரம் என்ற பெயரில்
நான் வாங்கிய சாபத்திற்கு
விமோசனம் கூட கிடைக்காது
போலிருக்கிறது.
கடவுள் மீதான நம்பிக்கையைத்
தொலைத்து பலகாலமாகிறது.
தொலைத்த நம்பிக்கையின்
எச்சமாய் வரம்(சாபம்) ....


No comments:

Post a Comment