Monday 26 January 2015

வைரஸ்களையும்
பாக்டீரியங்களையும்
மட்டுமே காதல்
செய்து வந்த
என்னுடல் செல்களில்
ஒரு புதிய ஒளி.
கண்மணி வழியே நுழைந்த
என் கண்மணியின்
பிம்பத்தை பிரதியிட்டு
ஒவ்வொரு செல்லிலும்
ஒட்டி விட
கட்டளையிடும் மூளை.
சில நேரங்களில்
பிரதிகளின் எண்ணிக்கை
மிகும் பொழுது
கண்ணீர்த் துளிகளாய்
என் கன்னத்தை
வருடிவிடுகின்றன!

No comments:

Post a Comment