Monday 26 January 2015

இந்துக்களுக்கும் தாய் மதம் இருந்தால் ?
இந்துத்துவா  புனித பசுக்களுக்கு சிறு வேண்டுகோள்.
எங்கள் ஊரில் ஒரு ஐநூறு
குடும்பங்கள் இருக்கும்.
இந்துக்கள்னு சொல்லிக்கிறாங்க.
ஆனா அவங்க யாருக்கும்
"யதோ யதோ கவஸாக்கியோ
அதோ அதோ மிட்சுபிஸ்ஸியோ"
தெரியவில்லை
"நியோக முறை குழந்தை பேறும்"
தெரியவில்லை.
சிவனிடம் வரம் வாங்கும் வழியும்
தெரியவில்லை.
இன்னும் எத்தனையோ கண்றாவிகள் அவர்களுக்கு
தெரியவில்லை.
பாண்டவர்கள் கௌரவர்கள்
பங்காளிச் சண்டை கதை , பாஞ்சாலி கதை
பத்து தலை இராவணன் கதை
முருகன் ஞானப் பழ கதை
மட்டுமே தெரிந்திருக்கிறார்கள்.
இன்னும் நிறைய கதை தெரிந்து
வைத்திருக்கிறார்கள்.
ஏன் அவர்களுக்கு இயேசுவின்
சிலுவை கதை கூட தெரிந்திருக்கிறது. பொதுவாவே அவங்களுக்கு கதைன்னா அவங்களுக்கு ரொம்ப புடிக்கும்ன்னு நினைக்கிறேன்.
அதுவும் உங்க கதையில நிறைய வில்லன்கள் , சண்டை காட்சிகள், விலங்கு கதாபாத்திரங்கள், மிருகம் பாதி மனிதன் மீதி கதாகதாபாத்திரங்கள் னு வித்தியாசமா இருக்கிறதுனால ஒரு சுவாரசியத்துக்காக நிறைய தடவ கேட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன். யார் வீட்டிலையும் உங்கள் பகவத் கீதையோ, சதுர்வேத புத்தகங்களோ இல்லை. ஏன் தேவாரம் திருவாசகம் ஆழ்வார் நாயன்மார் யாரபத்தியும் தெரியல. நாயன்மார் சொன்னா நாயக்கரா நாயரா ன்னு கேக்குறாங்க.
அவர்களுக்கு தேவ பாஷையான சமஸ்கிருதம் கூட  தெரியவில்லை.
உங்க மதத்தில் இல்லாத கருப்பசாமி, அய்யனாரு, முனியப்பன், மதுரவீரன், சின்ன அண்ணன் பெரிய அண்ணன் னு  நிறைய சாமி எல்லாம் கும்புடுறாங்க . நான் ஆண்ட சாதி நீ தீண்டாத சாதின்னு  அடிச்சிகிட்டு உங்க மத மானத்த
மத்த மதக்காரங்க முன்னாடி கப்பலேத்துறாங்க. அப்படி என்னத்த ஆண்டானுகளோ தெரியல.
மத்தவன ஏய்ச்சு பொழச்சோங்கறத ரொம்ப நாகரிகமா சொல்லிகிட்டு திரியுரானுக போல . தயவுசெய்து அவர்கள் தாய் மதம் எது என்று கண்டுபிடித்து துரத்தி விடுங்கள். அவர்களால் உங்கள் இந்து மதத்துக்கு மிகப்பெரிய அவமானம். எங்கள் ஊர்ல மட்டுமில்ல எங்க பக்கத்து ஊர்கள்ள கூட இது மாதிரி ஆட்கள் நிறைய இருக்கிறதா கேள்விபட்டேன். அது மாதிரியான புல்லுருவிகள் எல்லாரையும் துரத்தி விட்டு உங்கள் மதத்தை தூய்மை படுத்துங்கள்.எதோ சொல்றீங்களே சுச்சாவோ கிச்சாவோ அத மொதல்ல உங்க மதத்துல இருந்து ஆரம்பிங்க.
அப்புறம் நாட்ல சுச்சா பண்ணுங்க.
சுச்சா இந்துன்னு திட்டம் போட்டு
இன்றே இந்த போலி இந்துக்களை , வேற்று மத உளவாளிகளை எதாவது தொடப்பத்த வச்சு துரத்தி விடுங்கள். அப்புறமா உங்கள் மதத்தில் சேருவதற்கு விளம்பரம் பண்ணி தகுதி திறமை அடிப்படையில் மட்டுமே புனித பசுக்களைக் கண்டுபிடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். நான் கூட இவ்வளவு நாளா பிறப்பால இந்துன்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். இப்போ தான்  (இப்போன்னா எல்லாருக்கும் தாய்மதம் ஒன்னு இருக்குன்ற அளப்பரிய விஷயத்தை நீங்க கண்டுபுடிச்சீங்களே ) என்னுடைய தாய் மதம் வேற ஏதோ ஒன்னா இருந்திருக்கனும் தோணுது. என்ன உங்க சுச்சா இந்து திட்டம் மூலம் வெளியல ஒரு தொடப்பத்த வச்சு தள்ளி விடுங்க.
அப்புறமா முறையா விண்ணப்பம் போட்டு உங்க மதத்துல சேர்வதற்கான தகுதி  எனக்கு வந்திருச்சுன்னு நீங்க நெனச்சா வந்து சேர்ந்துக்கறேன். என்ன தப்பா நெனக்காதீங்க நானும் ஒரு புனிதப் பசுவா மாறணும் னு ஆசப்படுறேன். ஏத்துக்குவீங்களா ? வேற மதத்துக்கு போயிட்டு வந்தா காசு பணம் தருவீங்கன்னு கேள்விப்பட்டேன். எனக்கு அந்த சலுகை கூட கிடைக்குமா ?
உங்க மேல இவ்வளவு அன்பு , உங்க மதம் நல்லா இருக்கணும் நான் விரும்புறது எல்லாத்துக்கும் காரணம் உங்கள்

திட்டங்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் தான்.
சுச்சா திட்டம் தாய் திட்டம்
குடும்பத்துக்கு நாலு குழந்தைகள் திட்டம்
இன்னும் நெறைய ..
விமான கண்டுபிடிப்பு
ஏழரை சனி கண்டுபிடிப்பு
ராமர் பாலம் கண்டுபிடிப்பு
(மத்த நாட்டுக்காரன்லாம் பாலத்த
கடலுக்கு நடுவுல கட்டும் போது
கடலுக்குள்ள ஒளிஞ்சிட்டிருக்கிற
பாலத்தை கண்டுபிடிச்சு அதை எப்படி பயன்படுத்தனும் நீங்க சொன்ன அப்படியே புல்லரிச்சிடிச்சுன்னா பாத்துக்கோங்களேன்.)
நாசா வுட்ட செயற்கைகோள
கணநேரம் ஸ்தம்பிக்க வைக்க
சனி பகவானுக்கு கோயில்ன்ற
பேர்ல ரேடார் ஸ்டேஷன்
எதிர்ஏவுகணைத் திட்டம் போட்டது.

நானும் கத்தி மாதிரி இஸ்திரி போட்டு பத்து பதினைஞ்சு
காக்கி டிரௌசர் (மன்னிக்கவும் டிரௌசர்னு ஆங்கிலத்துல போட்டதுக்கு. யாரோ வெளிநாட்டுக்காரன் கண்டுபிடிச்சதால அப்படி பேர் வச்சுடானுங்க..... இல்ல இந்த டிரௌசர கண்டுபிடிச்சது கூட நம்ப ஆளுங்க தான்னா அதோட சமஸ்கிருத பேர் சொன்னீங்கன்னா அடுத்த பதிவுல மாத்திடறேன்) இப்பவே வாங்கி வச்சுட்டேன். நான் வெளியல போய்ட்டு திரும்ப புனிதப் பசுவா உள்ள வரும் போது உங்க சேர்ந்து ஓடியாடி வேலை செய்ய உதவியாவும் காத்தோட்டமாவும் இருக்கும்.

ஒரு முக்கியமான வேண்டுகோள்.
நான் திரும்ப புனிதப் பசுவா உங்க மதத்துல சேரும் போது
என்ன பிராமண ஜாதியில சேர்த்திருங்கோ. ஆளாத ஜாதி  ஆண்ட ஜாதியும் வேண்டாம் தீண்டாத ஜாதியும் வேண்டாம். அப்பதான் என்னால சொகம்மா எந்த பிரச்சனையும் இல்லாம கருத்து சொல்லிகிட்டு , நான் ரொம்ப நல்லவன் அவா தான் இப்படி அடிச்சுக்கறாள்ன்னு பொழுத ஓட்ட முடியும். ஒரே ஒரு விஷயம் இவ்ளோ நாள் மாமிசம் சாப்பிட்டு பழகிட்டேன். அத மட்டும் விட முடியாது. எதோ வேதத்திலேயோ புராணத்திலேயோ மாமிசம் சாப்பிட வழி சொல்லியிருக்காமே ! நடுவுல யாரோ புத்தர் ஒருமனுஷன் வந்து அன்பு கின்பு போதிச்ச அப்புறம் இந்த  சைவ வேஷம் போட ஆரம்பிச்சுடாங்கன்னு சொல்றாங்களே ! இதெல்லாம் உண்மையா ? உண்மையா இருக்கனும் னு வேண்டிக்கிறேன்.
உங்கள்ள ஒரு சிலர் அந்த புத்தர கூட பத்து அவதாரத்துல ஒண்ணு அப்படி சொல்றாங்களே உண்மையா ?
இப்படிக்கு
புனிதப் பசுவாகத் துடிக்கும்
தீவிர அதிதீவிர இந்து வெறியன்.
(சுச்சா திட்டத்தையும் தாய் திட்டத்தையும் கலந்து விடை கொடுங்கள்...
புனிதப் பசுவாக திரும்பி வருகிறேன். )

(இந்த திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் தூய்மை மிக்க
புனிதப் பசு இந்துக்கள் சிலகோடி பேர் கூட தேருவது கஷ்டம் னு  நினைச்சா,  உண்மையிலேயே சிறுபான்மை ஆட்களாக மாறிப் போவோம் னு நெனச்சா இந்த செய்திய  படிங்க. ...
இங்க ஒரு சில போலி இந்துக்கள்
எல்லாத்துலயும் retrospective effect கொடுத்து புனிதம் வளர்க்க
பார்க்கிறாங்க.  அப்படி பார்க்க ஆரம்பிச்சா உங்கள் மதத்துக்கு அடிப்படைன்னு சொல்லிக்கிற பகவத் கீதை பிறப்பதற்கு காரணமா இருந்த மகாபாரதம் பொய்யாகும் அப்புறம் எப்படி கீதை .ஒருத்தர் கூட இல்லாம  போறதுக்கு சிறுபான்மை நிலை எவ்வளவோ தேவலாம் இல்லையா? எப்படின்னு கேட்கறீங்களா. இந்த போலி புனிதர்கள் கருத்துப்படி நியோக முறை புனிதமாக இருக்காது. அப்புறம் அதன் வழி வந்தவர்களான மகாபாரத கதைமாந்தர்கள் புனிதமற்றுப் போவார்கள். அப்புறம் " யதோ யதோ கவாஸாக்கி" வசனத்திற்கு அதோகதி தான். யோசிப்பீர்களா ?)
"யதோ யதோ கவஸாக்கி
அதோ அதோ மிட்சுபிஸ்ஸி"
தேவலிபியில் தவறு இருந்தால்
மன்னிக்கவும்.
Disclaimer:
"எதை நீ படைத்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது."
ஒருவேளை முரணாயிருந்தால் மூலம் எது என்பதை புனிதப் பசுக்கள் புரிந்து கொள்வார்களா

No comments:

Post a Comment