Monday 26 January 2015

இரு கோடுகள் தத்துவம்
-----------------------------
ஒரு கோட்டை அழிக்காமல்
அதனை சிறுமை செய்ய
அருகில் சிறிது நீளமான
கோட்டை அமர வைத்து
பெருமைப்படும் கூட்டத்தில்........
துன்பத்தை
ஒரு பரிமாண
கோடாக
உருவகம் செய்தேன்.
ஒரு துன்பத்தை சிறுமை செய்ய
வேறொரு பெரிய துன்பத்தை
வைப்பதே வழக்கு. ......
நாட்கள் முளைத்த வாரங்கள் வாரங்கள் நீண்ட மாதங்கள்
மாதங்கள் பூத்த வருடங்கள்
வருடங்கள் கனிந்த யுகங்கள்
என துன்பக் கணக்கு
செழுமையான விருட்சங்கள்
சுகிக்கும் சோலையானது.
ஒவ்வொரு துன்ப சோலைக்கும்
ஒரு கோடு.
இன்று என் துருவத்தில்
சோலைகளுக்குப் பஞ்சமில்லை.
அந்த சோலைகளில் வெள்ளமில்லை
வறட்சியில்லை
புயல்மழையில்லை
காட்டுத்தீயில்லை
காகித தொழிற்சாலையில்லை
கனிம கொள்ளையில்லை
கார்பன் தொந்தரவு
இல்லவே இல்லை
என் துன்ப சோலைகளை
அழித்து எண்ணூறு அடியில்
மூவாயிரம் கோடி செலவில்
ஒற்றுமைக்கான சிலை
செதுக்கும்
முட்டாள் கொலைகாரசிற்பிகளில்லை.
கொலைகாரர்களைக் கொண்டாடும்
குருட்டு கூட்டங்களும்
என் சோலைகளை ஏறெடுத்தும்
பார்ப்பதில்லை.
கொலைகாரர்களைக் கொண்டாடும்
குருட்டுக் கூட்டத்தின் நீளமென
சோலைக்கொன்றாய் நீண்ட
ஒரு பரிமாணக் கோடுகள்
அதன் கனம் தாளாமல்
சற்று முன் வளைந்துவிட்டன.
ஒரு பரிமாணத்தின்(ல்) கனமா?
பிரபஞ்சத்தின் வளைவு தன்மை
போன்றதொரு வளைவு!
X அச்சுகள் வளைந்து
Z அச்சுகளை முகர்ந்துவிடப்பார்க்கிறதோ!
Z ஏதேனும் deodorant
பூசியிருக்குமோ
Axe விளம்பரத்தில் வரும்
அதே மடத்தனமான முகர்தல்.
எனக்கொரு சந்தேகம்
வளை கோடுகள்
ஒரு பரிமாணமா?
இரு பரிமாணமா?
துன்பத்தின்
வாசனையை எப்பரிமாணத்தில்
சேர்ப்பது ?






No comments:

Post a Comment