Monday 26 January 2015

"ஆசை துறக்க ஒவ்வொரு
முழுநிலவிலும் ஆசை பிறக்கிறது
போதி மரம் தான் கிடைக்கவில்லை. "

புத்தன் கனவில் சொல்கிறான்
"ஆசை துறக்க
போதி வேண்டாம்
முழுநிலவும் வேண்டாமே
ஆசை இருந்தாலே போதும்.
அவள் உன்னிடம்
திருடிய ஆசையை மட்டும்
வாங்கும் வழியைப் பார்.
வரும் பிறை நிலவில்
ஆசை துறக்கும் வழியை
நான் சொல்கிறேன்"

"என் ஆசையை திருப்பிக் கொடு
என்று எப்படிக் கேட்பேன்
அவளே என் ஆசையான பின்.
ஒருவேளை அவளையே கொடுத்தால்
ஆசை துறக்கும் ஆசை
என்னைத் துறந்துவிடும்.
புத்தனை துறக்கும் வழியைத்
தேட வேண்டும்
பிறை நிலவில்"


No comments:

Post a Comment