Monday 26 January 2015

மணல் கடிகார மனம்
-----------------------
மணல் கடிகாரம் போல்
என் மனதிலும்
ரெண்டு குமிழ்.
மனம் போலவே
கடிகாரத்தையும்
கட்டிவிட்டேன் சக்கரத்தில் !
ஒற்றைக் குமிழ்
துளை வழியே துளைத்தது
சுமைகளை.
மற்ற குமிழில்
இப்போ புயல் மழை.
இலகுவான குமிழ்
குதித்தது
எனக்கினி சுமையில்லை
சோகமில்லை.
அதிர்ச்சியில் உருண்டது
சக்கரம்.
துன்ப குமிழில்
தூவானம் விட்டது
இன்ப குமிழில்
இனிதே ஆரம்பித்தது
மனத் தூறல்.
சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கிறது.
என் மனம்
மணல் கடிகாரம்
ரெண்டும் காலம் தொலைத்தன...
என்னில்
காதல் பார்த்தவளும்
என் கடிகாரகத்தில்
காலம் பார்த்தவர்களும்
சுழன்று கொண்டேயிருக்கிறார்கள்
சரியாத காதல் பார்க்க
சரியான காலம் பார்க்க !

No comments:

Post a Comment