Monday, 26 January 2015

ஓவியம் வரைய
சிறந்த தூரிகை
சீரிய வர்ணங்கள்;
புகைப்படம் எடுக்க
வண்ண விளக்குகள்
உயர்ரக கேமரா;
கவிதை எழுத
அற்புதமான வார்த்தைகள்
கொண்ட அகராதி;
இசை படைக்க
புத்தம் புது
புல்லாங்குழல்
என பொறுப்புடன்
சேகரித்து மலைஉச்சிக்கு
புறப்பட்டான் புதுக் கலைஞன்.
வழியில்
தலைவிரி கோலாமாய்
மழலை ஒன்று
சகதியை தேகத்தில்
வரைந்து
வெறிச்சோடிய தெருவை
சோர்ந்த கண்ணில்
பிரதிபலித்து
அம்மா என்று அலறி
தேம்பி தேம்பி வெடித்தது.

No comments:

Post a Comment