Monday 26 January 2015

கணக்குப் புலிக்கு
பிள்ளைகள் மூன்று.
நூறு மீட்டர் ஓட்டம்.
பத்து நொடிகளில்
முடித்தான் மூத்தவன்.
ஆயிரத்து ஐநூறு மீட்டர் ஓட்டம்.
இரண்டாமவன்
இருநூற்று இருபது
நொடியில்
வெற்றி களிப்புடன்
வீடு திரும்பினான்.
அப்பா கேட்டார்
எழுபது நொடிகள்
ஏன் தாமதம்?
இளைய பிள்ளை
மாரத்தானில் ஓடிக்கொண்டிருக்கிறான்.!
அப்பாவிற்கு
இன்னும் சற்று நேரத்தில்
தெரிந்து விடும்.
கணிதப் புலிக்கு
மட்டும்
சில நேரங்களில்
பூனைக் குட்டிகள்
பிறந்துவிடுகிறது !
........
"Logic is not the reason"
Ambedkar.

No comments:

Post a Comment