Monday 26 January 2015

ஒரு பானையும் ஒற்றைப் பதரும்
--------------------------------பௌதிக நியதிகளுக்கு
எல்லாமே இடம் கொடுப்பதில்லை.
கோட்டுக்குள் சிக்காத
கோளத்தில் அடங்காத
குறும்புக்காரிகளும் குசலக்காரர்களும்
கும்மாளித்து குதூகலித்து
கொஞ்சவே செய்கிறார்கள்.
தன் நியதிக்கு
அடங்காதவர்களை நீக்கிவிடும்
அதிகாரத்தை தனக்கே
வாங்கியிருக்கிறது பௌதிகம்.
நியதிக்கு அடங்கா
நீசர்களை நெட்டித்தள்ளி
இளித்தது
பௌதிகம்
"அடங்கா பதர்களே!"
அப்படி ஒரு பதர்
சோற்றுப் பானையில்
சுகமாய் போட்டது
சுடுநீர் குளியல்.
அதோ வருகிறான்
ஒரு பானைச் சோற்றை
ஒற்றைப் பருக்கையால்
பதம்காணும்
விசித்திர விஞ்ஞானி.
ஒற்றைப்
பதரின் பாதம்பார்த்து
சொன்னான் பானையின் பதம்.
"பானை முழுதும் பதர் கூட்டம் ! ".
விளங்கா விஞ்ஞானியின்
விடை கேட்ட
அத்தனை
மதியிலி பயல்களும்
சொன்னார்கள்
"பானை  முழுதும் பதர் கூட்டம்".


No comments:

Post a Comment