Monday, 26 January 2015



கற்களை எறிந்து குளத்தில்
அலைகளை செதுக்கிருந்தேன்.
நேர்த்தியிலும் நளினத்திலும்
பிறைசூடி நடனமிட்ட
நடராஜன் சிலையை விட
இந்த அலைகள் மிஞ்சியிருந்தன.
ஏன் பிறைநிலவு கூட
அந்த அலைகளில் தன்னை
சூடிக் கொள்ள வந்துவிட்டது.
அப்படியே கங்கையும்
வந்துவிட்டால் போதும் !

No comments:

Post a Comment