Monday 26 January 2015

கனவு
பயங்கர கனவு
கனவுக்குள் கனவு
Inception போல.
அந்த கனவுக்குள் கனவில்
உலகில் அனைவரும்
பைத்தியமாகிப் போனார்கள்.
அதிர்ச்சியில்
உள் கனவு கலைகிறது.
கனவுக்குள் கனவு
சிறிது ஏற்படுத்திய தாக்கம்
இந்த கனவிலும் கனமாய்த்
தொடர்கிறது.
அதிர்ச்சியில் இந்தக் கனவும்
கலைகிறது.
விழித்தால் உண்மையில்
உலகமே
இறைவன் மேல்
பைத்தியமாகியிருந்தது.
எவ்வளவு அதிர்ச்சி வந்தாலும்
இந்த உண்மை கலைவதாயில்லை.


No comments:

Post a Comment